சற்று முன்



பேச்சி திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை காயத்ரி அவரது நடிப்பில் பேச்சி. மற்றும் தேவ்ராம்நாத் , ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 இப்படத்தை இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 

காயத்ரி மற்றும் தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். பின் அவர்களுக்கு உதவுவதற்காக லோக்கல் பாரஸ்ட் கைட் பாலா சரவணன் அவர்களுடன் காட்டுப் பகுதிக்கு செல்கிறார். போன இடத்தில் நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். பாலா சரவணன் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் அதை மீறி அவர்கள் உள்ளே செல்கின்றனர்.

அதற்குப் பிறகு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அதனால் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் வருகிறது. அதை சமாளிப்பதற்கு அவர்கள் நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். மேலும் காட்டில் காத்திருக்கும் பேச்சிக்கு இவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்தப் பேச்சி? எதற்காக அவள் காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? பேச்சியிடமிருந்து அனைவரும் தப்பிப்பார்களா? என்பதுதான் மீதி கதை.

கொல்லிமலையை மிக அழகாக காண்பித்துள்ளனர். 

காட்டுப்பகுதி அனைத்தும் சிறப்பு. 

பால சரவணன் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது நடிப்பு மிக நன்றாக உள்ளது. 

காயத்ரி அவரது நடிப்பு சிறப்பு மிக அழகாக உள்ளார். 

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். 

இசை மற்றும் பினனி இசை நன்றாக உள்ளது. 

இத்திரைப்படம் கொல்லிமலை காடுகளை சுற்றி நடக்கும் அமானுஷ்யங்களை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் மிக அழகாக எடுத்துள்ளார் இயக்குனர். 

திரைப்படம் திகில் ஹாரர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை