சற்று முன்



டிமான்டி காலனி 2 திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அருள்நிதி அவரது நடிப்பில் டிமான்டி காலனி 2. 

மற்றும்  பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்ரீனிவாசன் இறக்காமல் இருப்பதே இந்த பாகத்திற்கான ஓபனிங். அவரை யார் காப்பாற்றினார்கள் ? , எதற்காக காப்பாற்றினார்கள் ? , டிமான்டிக்கும் முதல் பாகத்தில் வந்த செயினிற்கும் என்ன ஆனது என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்.

டிமான்டி 2 படம், சற்று மாறுப்பட்டதாகவே இருந்தது. 15 ஆம்  நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனைதான் இப்போது நடக்கும் அனைத்தும் விஷயங்களுக்கு காரணமாக இருக்கிறது. அதை சஸ்பென்ஸாக வைத்து, அது தொடர்பான சம்பவங்களை ஒவ்வொரு நிமிடமும் நம்மை சீட்டின் முனையில் உட்கார வைத்து கதை கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து.

2009, 2015, 2021 என வெவ்வேறு ஆண்டுகளில் கதை நகர்கிறது. முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் ஒன்று சேர முன்னும் பின்னும் காலம் கடந்து அழைத்து சென்றுள்ளனர். Anti Christ, 666, மர்ம புத்தகம் போன்றவை வழக்கத்திற்கு மாறாக இருந்து சுவாரஸ்யத்தை கூட்டிகிறது. 

அருள்நிதி மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு. 

பிரியா பவானி சங்கர் மிக நன்றாக நடித்துள்ளார் மிக அழகாக உள்ளார். 

அருண்பாண்டியன் சிறிது நேரம் வந்தாலும் இப்படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்துள்ளார். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது பிஜிஎம் இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட். 

திரைப்படம் ஹாரர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை