Header Ads

சற்று முன்



பயமறியா பிரம்மை’ திரை விமர்சனம் !

 

தமிழ்     சினிமா    உலகில் நடிகர்களான    ஜேடி , குரு சோமசுந்தரம் , ஹரிஷ் உத்தமன் , ஜான் விஜய் ,  சாய் பிரியங்கா ரூத் , விஷ்வந்த் , திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ராகுல் கபாலி இயக்கியுள்ளார்.

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி 25 வருடங்களில் 96 கொலைகளை செய்து விட்டு ஜெயிலில் இருக்கிறார் ஜெகதீஷ்

 அவரை சந்தித்து புத்தக எழுத  வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகிறார் எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார். அது எப்படி நடக்கும்? என்று ஜெகதீஷ் கேட்கிறார். ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’.

இதுவே திரைப்படத்தின் கதை 

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் ஜெகதீஷ் கதாபாத்திரமாகவே நடித்துள்ளனர் திரையில் காண்பித்துள்ளார் இயக்குனர். 

அனைத்து நடிகர் நடிகைகளும் தனக்கு கொடுத்த வேலையை மிக கட்சிதமாக செய்துள்ளனர் நடிப்பில் எந்த குறையும் இல்லை நன்றாக நடித்துள்ளனர்.

இயக்குனர் சொல்ல நினைப்பதை கொஞ்சம் குழப்பத்துடன் சொல்லி இருக்கிறார் கதையை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினம்தான் உன்னித்து  பார்க்க வேண்டிய விஷயம் தான் திரைப்படம்

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக அமைந்துள்ளது.

Rating : 2 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை