சற்று முன்

ரோஜா மல்லி கனகாம்பரம் 'எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது ! | ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' ! | HDFC Bank signs MoU with Indian Air Force and CSC Academy; ! | Hyatt India, Spokesperson, said, “We are deeply saddened by the unfortunate incident at the hotel ! | HDFC ERGO conducts the grand finale of the Insurance Awareness Awards Junior Quiz – Tamil Nadu & Puducherry Chapter 2025 ! | உலக சிறுநீரக தினம் 2025: சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தை நடத்திய அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் ! | மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது ! | சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திரை விமர்சனம் ! | ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு ! | ஸ்வீட் ஹார்ட் திரை விமர்சனம் ! | ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ் ! | ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ! | வருணன் திரை விமர்சனம் ! | ராபர் திரை விமர்சனம் ! | டெக்ஸ்டர் திரை விமர்சனம் ! | மாடன் கொடை விழா திரை விமர்சனம் ! | ஈரோட்டில் புதிய AutoEVMart விற்பனை நிலையத்துடன் கிரீவ்ஸ் ரீடெய்ல் அதன் EV இருப்பினை வலுப்படுத்துகிறது ! | ஆண்டிகுப்பம் முதல் அமெரிக்கா" வரை என்ற முன்னாள் மாணவரின் பேச்சு சக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ! | ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! | நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம் ! | SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! | ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் - மர்மர் இயக்குநர் வேண்டுகோள் ! | Blue Star expands its comprehensive range of Commercial Refrigeration solutions to meet growing demands ! | ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா ? | பிரபல நடிகை ரேஷ்மா பசுபலேட்டி பங்குபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியை வசந்த் & கோ உடன் பஜாஜ் கொண்டாடியது !


செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்போராயம் சார்பில் புதிய நூல் வெளியிட்டு விழா. ஜார்கண்ட் மாநில ஆளுநர் பங்கேற்ப்பு !


செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்போராயம் சார்பில் புதிய நூல் வெளியிட்டு விழா. ஜார்கண்ட் மாநில ஆளுநர் பங்கேற்ப்பு !

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுடபக் கல்வி நிறுவனம் சார்பில் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்ப்பேராயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் எழுதிய நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி என்ற தலைப்பில் புதிய நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுனர் சி.பி. இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரியின் துணை வேந்தர் முத்தமிழ் செல்வன், தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு. நாகராசன், எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாக நிர்வாகி அருணாச்சலம், உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக இன்று சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த கொடிக்காத்த குமரன், சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் பிறந்த நாள் தினத்தை யொட்டி இரண்டு தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் பேராசிரியர் கரு.நாகராசன் எழுதிய நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி என்ற புதிய காவிய புத்தகத்தை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன வெளியிட்டார். 

தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறுகையில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு.நாகராசன் தமிழ் இலக்கியத்தை கொண்டு புதிய புதிய புத்தகங்களை எழுதி உள்ளார். இதுவரையில் 75 புத்தகங்களை எழுதி அர்ப்பணைத்துள்ளார். தமிழ்ப்பேராயத்தின் பெரும் ஆக்கத்தினை கொண்டவர். பல புத்தகங்களை இவர் எழுதி இருந்தாலும் 75வதாக எழுதிய இந்த புத்தகம் காவியமாக்கியது. இந்த புத்தகத்தில் மோடி அவர்களின் பல திட்டங்களை வெளிபடுத்தியுள்ளது. மேலும் இந்த புத்தகத்தை சரியான நேரத்தில் வெளியிட்டது சரியான தருணம் என்பது மிக்க மகிழ்சியாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் புதிய புதிய நூல்களை விரும்பி படிப்பதற்க்கு காரணம் காவிய நாயகர்களின் வரலாறு, கவிதை போன்றவைகளை அந்த வகையில் தான் இந்த புத்தகமும் அமைந்துள்ளது. தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் புதிய நூல்களை வெளியிடுவதற்காக சுமார் 20லட்சம் வழங்கபட்டு வருகிறது. இதனால் தமிழ்ப்பேராயத்தின் பெருமை உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்ப்பேராயத்தின் மூலம் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் நூல்களை வெளியிட்டவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் உள்ள 10கோடி பேர் தலை நிமிர்ந்து உள்ளார்கள் என்றால் அதற்க்கு காரணம் மோடி அவர்கள் தான், அவர் எங்கு சென்றாலும் தமிழ் பெருமையை பற்றி பேசுவார். ஒரு நாட்டின் மன்னன் சிறப்பாக ஆட்சி செய்தால் அதற்க்கு பரிசாக செங்கோல் வழங்கி கெளரவிப்பார்கள் அந்த வகையில் இந்த நாட்டை திறமையாக ஆண்டு வருவதால் புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. எந்த உலகத்திலும் இல்லாத சாதனை நமது இந்தியாவிற்க்கு உண்டு அதில் பாராளுமன்றத்தில் தமிழ் பேசியது சாதனையாக உள்ளது. மோடி அவர்கள் கொண்டுவந்துள்ள பல திட்டங்கள், சாதனைகளை உலக தலைவர்கள் போற்றும் வகையில் அமைந்துள்ளதால் இந்தியா இருப்பதற்க்கு காரணம் மோடி என பெருமைபடுவதாக கூறினார். உலக நாடுகளில் உள்ள பல தலைவர்கள் மோடி அவரை பாஸ் என்று அழைக்கிறார்கள். தமிழின் வளர்ச்சிக்காக தனிமனிதன் கொடியை தூக்கி பிடிக்கிரானோ இல்லையோ மோடி அவர் தூக்கி பிடிக்கிறார். இறுதியாக தமிழின் வளர்ச்சிக்காக பல புத்தகங்களை வெளியிட வேண்டுமென கரு.நாகராசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பின் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி. இராதா கிருஷ்ணன் கூறுகையில் ஒரு குடும்பத்தின் தலைவர் எப்படியோ அப்படியே அந்த குடும்பமும் அமைப்பும், அதேபோல இந்த நாட்டின் தலைவரும் அனைத்திலும் சாதனை படைத்தவராகவே உள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். கொரோனா காலத்தில் மக்களின் நலனுக்காக தடுப்பூசிகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டார். நமது நாட்டு மக்களுக்கு மட்டும் இல்லாமல் பல நாட்டு மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கினார். கொரோனாவை கட்டுபடுத்துவதற்க்கான செயல்முறைகளையும், திட்டங்களையும் உலக நாட்டு தலைவர்கள் மோடியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டனர். கொரோனா தடுப்பதற்காக தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்கி சாதனை செய்து உள்ளார். நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பொறுப்பேற்பதற்கு முன்பு அம்மாநிலத்தில் சுத்தமான குடிநீர் 8சதவீதம் மட்டுமே கிடைத்தது அதன்பிறகு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 28சதவீதம் குடிநீர் கிடைத்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுமையாக அனைவரும் குடிநீர் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்ப்பேராயம் நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி என்ற தலைப்பில் புதிய காவியம் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான மாண்பனை டாக்டர் தா.இரா. பாரிவேந்தர், ஜாஜ்கண்ட் மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி.இராதாகிருஷணன், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் செ.முத்தமிழ்செல்வன், பல்கலைகழகத்தின் வளாக நிர்வாகி திரு. இரா. அருணாச்சலம், தமிழ்பேராயத்தின் தலைவர் பேராசிரியர் கரு. நாகராசன், தமிழ்ப்பேராயத்தின் உதவி பேராசிரியர் கவிஞர் மு.பாலசுப்பிரமணி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பா. ஜெய்கணேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை