சற்று முன்



யாதும் ஊரே யாவரும் கேளிர் திரை விமர்சனம் !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர்

இயக்குனர் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், மகிழ்திருமேனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

இலங்கை அகதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம். ஒரு லட்சியத்தை நோக்கி செல்லும் அகதி தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினை தான் படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் ஒருவர் சிறு வயதிலேயே அகதியாக ராணுவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின் சில வருடங்கள் இவர் தண்டனை அனுபவித்து ஒரு இளைஞனாக கள்ளத் தோணி ஏறி இந்தியாவிற்கு வருகிறார். கேரளாவில் சில வருடங்கள் அவர் தங்கி இருந்து முறையான இசையை கற்றுக் கொள்கிறார்.

பின் லண்டனில் நடக்கும் ஒரு இசை போட்டியில் கலந்து கொள்ள அந்த அகதி புனிதன் முயற்சிக்கிறார். ஆனால், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் அவரிடம் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் இவர் கிருபாநிதி என்ற வேறொரு பெயரில் அடையாளத்தை வாங்குவதற்கு கொடைக்கானல் செல்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியை பழிவாங்க போலீஸ்காரர் துடிக்கிறார்.

மறைந்த நடிகர் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் நடிப்பு பிரமாதம்.

நாம் அவரை திரையில் மிக நாட்களுக்கு  பிறகு பார்க்கிறோம் அவரது நடிப்பு பேச்சு அனைத்தும் நம்மை கவர்ந்தன. 

இசை கலைஞர் என்றால் விக்கு வைக்கணுமா? முடி நீளமாக இருக்க கூடாதா? என்ற கேள்வியும் எழுகிறது. அதோடு அதிக ஈடுபாடுடன் நடிக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது எதார்த்தமான நடிப்பை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி பேசும் வசனம் எல்லாம் பார்வையாளர்களை உருக வைத்திருக்கிறது. விஜய் சேதுபதி- மேகா ஆகாஷ் இடையான காதல் காட்சிகள் பெரிதாக இல்லை. 

மேகா ஆகாஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். மிக அழகாக குழந்தைத்தனமான முகம் அழகாக இருக்கிறார்.

படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. ரொம்ப எமோஷனல் ஆன கதை. 

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை