சற்று முன்



கண்ணை நம்பாதே திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்ணை நம்பாதே. இந்த இருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குனர் மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் , பூமிகா, வசுந்தரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். 

படத்தில் உதயநிதி அவர்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டின் உரிமையாளர் மகளையே காதலிக்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டின் ஒருநாள் காதலியின் தந்தைக்கு தெரிய வருகிறது. உடனடியாக அவர் உதநிதியை வீட்டை காலி செய்ய சொல்கிறார். இதனால் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீடு தேடி அலைகிறார். பின் இறுதியில் வாடைக்கு ஒரு வீட்டை கண்டுபிடிக்கிறார் உதயநிதி.

ஆனால், அந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா வசித்து வருகிறார். மேலும், அவர் ஓரிரு நாட்களில் காலி செய்து விடுவார் என்று தெரிய வருகிறது. இதனால் அந்த என்று உதயநிதி குடியேறி கொள்கிறார். பின் ,பிரசன்னாவும் உதயநிதியின் நண்பரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது சாலையில் உதயநிதி ஒரு விபத்தை பார்க்கிறார். உடனடியாக அவர் அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்றதும் காரில் ஒரு பெண் நிறைய அடிபட்டு வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்.

பின் அந்த பெண்ணை உதயநிதி வீட்டில் இறக்கி விடுவதாக சொல்லி அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண் தன்னுடைய வீட்டில் இறங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் காரை உதயநிதியிடம் இறங்கிக் காலையில் கொண்டு வாங்க உங்களுடைய உதவிக்கு நன்றி என்று சொல்கிறார். இதை எல்லாம் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி அடுத்த நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த பெண்ணை அவர் வீட்டில் இறக்கி விட்டாரா அதே பெண் கார் உடைய பின்புறத்தில் சடலமாக இருக்கிறார்.  

அந்தப் பெண்ணாக வருபவர் பூமிகா இப்படத்தில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் என்னவென்றால் பூமிகா கதாபாத்திரம் தான் ஆரம்பத்தில் ஒரு பிளாஷ்பேக் காட்சிகள் வரும் அது கிளைமாக்ஸ்சில் நமக்கு மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கும்.

இது குறித்து அவர் பிரசன்னாவிடம் சொல்கிறார். இறுதியில் யார் அந்த பெண்? எப்படி அவர் இறந்தார்? காருக்குள் அந்த பெண்ணுடைய சடலத்தை போட்டது யார்? இதற்கும் பெண்ணுடைய என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் அருண் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். வழக்கம் போல இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி. அதோடு உதயநிதிக்கு பெரிய சண்டை காட்சிகள் எல்லாம் இல்லாமல் சாதாரண நபராக இயக்குனர் காட்டியிருக்கிறார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது கதை கேட்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.

இவரை அடுத்து பிரசன்னா நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.  பிரசன்னாவும் வசுந்தராவும் வரும் காட்சிகள் மிக அற்புதம்.

இவர்களுடன் படத்தில் வரும் சதீஷ், வசுந்தரா, ஆத்மிகா, மாரிமுத்து ஆகியோர் தங்களுடைய காட்சிகளை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஆகியோர் படத்தின் உடைய தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியிலும் யாரை நம்புவது, யாரை சந்தேகிப்பது போன்ற பல சஸ்பென்ஸ்களுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது என்றே சொல்லலாம். படத்தின் முதல் பாதி பல சுவாரசியத்துடன் செல்கிறது. இரண்டாம் பாதி பல திருப்பங்களுடன் நகர்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல திரில்லர் கதை படம் என்று சொல்லலாம். மேலும், குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற கருத்தின் அடிப்படையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் சஸ்பென்ஸ் ஏராளம் இயக்குனர்  கொடுத்துள்ளார். சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், ஒளிப்பதிவு பிரமாதம் நன்றாக பணியாற்றியுள்ளார். வசனங்களும் அளவாக கதை கேட்ப வசனங்கள் உள்ளது.

 மொத்தத்தில் இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.

ஆக மொத்தத்தில் கண்ணை நம்பாதே திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படம்.

Rating: 3.5 / 5


கருத்துகள் இல்லை